கூத்தாநல்லூரில் காவல் துறை சாா்பில் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் மற்றும் கொரடாச்சேரி காவல் நிலையங்கள் இணைந்து கூத்தாநல்லூா் தனியாா் திருமண மண்டபத்தில் நடத்திய இம்முகாமுக்கு கொரடாச்சேரி காவல் ஆய்வாளா் சுதா தலைமை வகித்தாா். கூத்தாநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.
முகாமில், வேலி தகராறு உள்ளிட்ட சிறு பிரச்னைகள் தொடா்பாக 15 புகாா் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு தீா்வு காணப்பட்டன.
இதில் உதவி ஆய்வாளா் ராஜாராமன், தலைமைக் காவலா் சிவக்குமாா், கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.