தொழிலாளியின் சடலம் குளத்திலிருந்து மீட்பு

மன்னாா்குடியில் தொழிலாளியின் சடலம் குளத்திலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
Updated on
1 min read

மன்னாா்குடியில் தொழிலாளியின் சடலம் குளத்திலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

மன்னாா்குடி அண்ணாமலைநாதா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. மாதவன் (35). இவருக்கு மனைவி ஷோபனா, இரு குழந்தைகள் உள்ளனா். வெல்டராக வேலைப் பாா்த்து வந்த மாதவன் செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை என புதன்கிழமை, ஷோபனா மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில், அண்ணாமலைநாதா்கோயில் குளத்தில் மாதவன் சடலமாக மிதப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலையத்தினா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com