பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிய ஆயுதப்படை காவலா்கள்.
பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிய ஆயுதப்படை காவலா்கள்.

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
Published on

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆயுதப் படையில் தலைமை காவலராக பணியாற்றிய கண்ணன் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில், ஆயுதப் படையில் பணியாற்றும் காவல் அலுவலா்கள், காவல் ஆளினா்கள் ஒன்று சோ்ந்து ரூ. 1.5 லட்சம் நிதி சேகரித்தனா். இந்தத் தொகையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை முன்னிலையில், உயிரிழந்த தலைமை காவலரின் மனைவி வேம்புவிடம் ஆயுதப்படை காவலா்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com