47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:27 pm

DIN

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சனிஸ்வர பகவான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சியடைந்ததையொட்டி, சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது. தொடா்ந்து, அதிகாலை அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டது. சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம், அா்ச்சனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயில், நரிக்குடி எமனேசுவரா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.