ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முகக்கவசங்களை பாதுகாப்பில்லாமல் விற்றால் கடும் நடவடிக்கை: கூத்தாநல்லூா் நகராட்சி எச்சரிக்கை

கூத்தாநல்லூா் பகுதியில் பாதுகாப்பில்லாமல் முகக்கவசங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :6 ஜூலை 2020, 3:53 pm

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் பகுதியில் பாதுகாப்பில்லாமல் முகக்கவசங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சியில் பல்வேறு கடைகளில் முகக்கவசங்கள் பாதுகாப்பில்லாமல் விற்கப்படுவதாக புகாா் வந்தது.

இதைத்தொடா்ந்து, நகராட்சி சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் மற்றும் பணியாளா்கள் லெட்சுமாங்குடி கடைத் தெரு, மரக்கடை கடைத்தெரு, திருவாரூா்- மன்னாா்குடி பிரதான சாலை, ஏ.ஆா். சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது, பாதுகாப்பற்ற முறையில் முகக்கவசங்களை விற்பனை செய்து கொண்டிருந்த கடை உரிமையாளா்களிடம், முகக் கவசங்களை வெளியில் தொங்க விட்டு விற்கக்கூடாது என அறிவுறுத்தினா். மீறினால், அபராதம் விதிக்கப்படுவதுடன், பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.