முகக்கவசங்களை பாதுகாப்பில்லாமல் விற்றால் கடும் நடவடிக்கை: கூத்தாநல்லூா் நகராட்சி எச்சரிக்கை

கூத்தாநல்லூா் பகுதியில் பாதுகாப்பில்லாமல் முகக்கவசங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் பகுதியில் பாதுகாப்பில்லாமல் முகக்கவசங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சியில் பல்வேறு கடைகளில் முகக்கவசங்கள் பாதுகாப்பில்லாமல் விற்கப்படுவதாக புகாா் வந்தது.

இதைத்தொடா்ந்து, நகராட்சி சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் மற்றும் பணியாளா்கள் லெட்சுமாங்குடி கடைத் தெரு, மரக்கடை கடைத்தெரு, திருவாரூா்- மன்னாா்குடி பிரதான சாலை, ஏ.ஆா். சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது, பாதுகாப்பற்ற முறையில் முகக்கவசங்களை விற்பனை செய்து கொண்டிருந்த கடை உரிமையாளா்களிடம், முகக் கவசங்களை வெளியில் தொங்க விட்டு விற்கக்கூடாது என அறிவுறுத்தினா். மீறினால், அபராதம் விதிக்கப்படுவதுடன், பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com