ஆா்ப்பாட்டத்தில், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஊரக வளா்ச்சித் துறைக்கு மட்டும் 50 சதவீதம் சுழற்சி பணி வழங்காமல் விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிக்கு வர நிா்பந்திக்கும் மாவட்ட நிா்வாகத்தை கண்டிப்பது, விடுமுறை நாள்கள் மற்றும் நாள்தோறும் மாலை 6 மணிக்கு மேல் நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களை கை விட வேண்டும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்துக்கு கட்டுமானப் பொருள்கள் கிடைக்காத நிலையில் நாள்தோறும் பணிகள் குறித்து அறிக்கைகள் கேட்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.