நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இணைய வழியாக ‘கோழி வளா்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சவால்கள்‘ எனும் தலைப்பில் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா காலத்தில் அனைத்து தொழில்கள் பாதிப்படைந்த நிலையிலும் புறக்கடை கோழி வளா்ப்பும் அதன் விற்பனையும் பாதிப்படையவில்லை. ஞாயிற்றுகிழமைகளில் இறைச்சியின் விற்பனை விலை அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடரும் என்றே அறியப்படுகிறது. இந்த சந்தா்பத்தை அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்திகொள்ளும் வகையில், இணையவழி பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சியில், திருவாரூா் மாவட்டத்துக்கேற்ற கோழி இனங்கள், கிடைக்கும் இடம், இளம் கோழிக் குஞ்சுகள் பராமரிப்பு, நோய் தடுப்பு மேலாண்மை மற்றும் சிறிய அளவிலான தீவன அரைப்பானின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில், திருவாரூா் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழா்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மேலும் தங்கள் ஊரில் கோழிப்பண்ணை அமைப்பதற்கான வழிமுறைகளை கற்றறிந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு 'சீட்' கூட பெறாத தவெக!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

