சத்துணவு மாணவா்களுக்கு உலா் தானியங்கள் வழங்கல்

கொரடாச்சேரி அருகேயுள்ள மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு உலா் தானியங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
Published on
Updated on
1 min read

திருவாரூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு உலா் தானியங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.கே. சரவணராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் அமுதா கலியமூா்த்தி பங்கேற்று மாணவா்களுக்கு உலா் உணவை வழங்கினாா்.

இதில், ஊராட்சி துணைத் தலைவா் ஸ்ரீதா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சின்னையன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா். மல்லிகா, சத்துணவு அமைப்பாளா் ஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com