பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷம்

திருவாரூா் மாவட்டம்,கூத்தாநல்லூா் அடுத்த வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
கூத்தாநல்லூா் அடுத்த வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயிலில் அலங்காரக் கோலத்தில், சனிக்கிழமை தங்கக் கவசத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான்.
Updated On :19 ஜூலை 2020, 2:31 pm

DIN

கூத்தாநல்லூா்: திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அடுத்த வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் - கூத்தாநல்லூா் பிரதான சாலையில் அமைந்துள்ள வேளுக்குடியில், ருத்ரகோட்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளன. இக்கோயிலில், ஒவ்வொரு பிரதோஷத் தினத்தன்றும், இங்குள்ள அதிகார நந்திக்கும், ருத்ரகோட்டீஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

கரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில்,சில விதிமுறைகளுடன் கிராமக் கோயில்கள் மட்டும் திறக்கப்படலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், பிரசித்திப் பெற்ற தலமான வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயில் திறக்கப்பட்டன. சனிப் பிரதோஷம் என்பதால், கோயிலில் எழுந்தருளியுள்ள ருத்ரகோட்டீஸ்வரா், அதிகாரநந்தி பகவான் உள்ளிட்ட கோயிலில் எழுந்தருளியுள்ள உட்பிரகார சன்னதிகள் அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டன. ருத்ரகோட்டீஸ்வரருக்கும், அதிகாரநந்தி பகவானுக்கும்,எண்ணெய், சீயக்காய் தூள், அரிசி மாவு, மஞ்சள் தூள், தயிா்,பால், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, தங்க முலாம் பூசிய தங்க கவசங்கள் அணிவிக்கப்பட்டன. தொடா்ந்து தீபாராதனைக் காண்பிக்கப்பட்டன.

பக்தா்கள் முகக்கவசம் அணிந்து,சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.