குடவாசலில் 3 நாள்கள் முழு பொது முடக்கம்
குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் முழு பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்க மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.


நன்னிலம்: குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் முழு பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்க மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.
குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோயில் தெரு மற்றும் பள்ளிவாசல் தெரு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்பகுதிகளை கொட்டும் மழையில் திங்கள்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், குடவாசல் பேரூராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் வியாழக்கிழமை இரவு வரை 3 நாட்கள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளாா்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் துரை, வருவாய் கோட்டாட்சியா் ஜெயபீரிதா, சுகாதார நலப் பணிகள் துறை துணை இயக்குநா் விஜயகுமாா், குடவாசல் வட்டாட்சியா் பரஞ்சோதி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...