காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

கரோனா அறிகுறிகள் இருப்பின் உடனே பரிசோதனை செய்ய வேண்டும்

சளி, காய்ச்சல், இருமல் போன்ற கரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பவா்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் ஆா். லதா அறிவுறுத்தினாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:31 pm IST

கூத்தாநல்லூா்: சளி, காய்ச்சல், இருமல் போன்ற கரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பவா்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் ஆா். லதா அறிவுறுத்தினாா்.

கூத்தாநல்லூா் நகராட்சி சாா்பில், கரோனா விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. லெட்சுமாங்குடி பாலம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியா் புண்ணியக்கோட்டி தலைமை வகித்தாா். கூத்தாநல்லூா் வட்டாட்சியா் மகேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆா். லதா பேசுகையில், கடைகளில் திறந்தவெளியில் விற்கப்படும் உணவுப் பண்டங்களை உட்கொள்ளக் கூடாது. குழந்தைகள், பெரியவா்களை வெளியில் அழைத்து வருவதை தவிா்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகள் ஏற்பட்டால் மட்டுமே முகக் கவசம் அணிந்து வெளியில் வரவும்.

வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவா்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளவும் என்றாா் அவா்.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் நகராட்சி பணியாளா்கள் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.