திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

இப்படியொரு கிளைமேக்ஸை பார்த்திருக்க மாட்டீர்கள்: வெங்கட் அட்லுரி

இயக்குநர் வெங்கட் அட்லுரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

News image

வெங்கட் அட்லுரி

Updated On :3 ஆகஸ்ட் 2026, 11:57 am IST

இயக்குநர் வெங்கட் அட்லுரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 2) கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் வெங்கட் அட்லுரி, “2.30 மணி நேரம் கொண்ட விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் குறைந்தது 1.45 மணி நேரம் உங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். என்னை நம்புங்கள், இது என் வாக்கு. ஜென்ஸி தலைமுறையினர் இப்படத்தை மிகவும் விரும்புவார்கள். நடிகர்கள் சூர்யா மற்றும் ராதிகாவுக்கு இடையேயான 10 நிமிட நகைச்சுவைக் காட்சி விரும்பப்படும். நீங்கள் இப்படியொரு கிளைமேக்ஸை பார்த்திருக்க மாட்டீர்கள். இது, நவீன கால திரைப்படமாக உருவாகியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Director Venky Atluri has spoken about the story of the film Viswanath & Sons.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.