இயக்குநர் வெங்கட் அட்லுரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 2) கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் வெங்கட் அட்லுரி, “2.30 மணி நேரம் கொண்ட விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் குறைந்தது 1.45 மணி நேரம் உங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். என்னை நம்புங்கள், இது என் வாக்கு. ஜென்ஸி தலைமுறையினர் இப்படத்தை மிகவும் விரும்புவார்கள். நடிகர்கள் சூர்யா மற்றும் ராதிகாவுக்கு இடையேயான 10 நிமிட நகைச்சுவைக் காட்சி விரும்பப்படும். நீங்கள் இப்படியொரு கிளைமேக்ஸை பார்த்திருக்க மாட்டீர்கள். இது, நவீன கால திரைப்படமாக உருவாகியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Director Venky Atluri has spoken about the story of the film Viswanath & Sons.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த சூர்யா! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பார்த்த சூர்யா! என்ன சொன்னார்?

வெளியானது வெட்டிங் பாடல்!

அதிக விலைக்கு விற்பனையான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உரிமம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




