பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பார்த்த சூர்யா! என்ன சொன்னார்?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து சூர்யா பேசியது...

News image

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

Updated On :29 ஜூலை 2026, 11:50 am IST

நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பார்த்து என்ன சொன்னார் என்பதை இயக்குநர் கூறியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன.

அண்மையில், நடிகர் சூர்யா தமிழ், தெலுங்கில் பாடிய இப்படத்தின் 2-வது பாடலான வெட்டிங் சாங் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் வருகிற ஆக. 2 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் வெங்கட் அட்லுரி, “சூர்யா சார் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்தார். அவருக்கு இப்படம் முழு திருப்தியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் 9 வடிவங்களாக எழுதினேன். கிளைமேக்ஸும் மூன்று வடிவங்களில் இருந்தது. சூர்யா சார் தேர்ந்தெடுத்த கிளைமேக்ஸை வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு இப்படம் பிடித்திருப்பதால் கருப்பைத் தொடர்ந்து வெற்றிப்படமாக மாறலாம் என்றே தெரிகிறது.

The director has revealed what actor Suriya said after watching the movie Viswanath & Sons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.