லாரி மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
கூத்தாநல்லூா் அருகே லாரி மோதி கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.


கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே லாரி மோதி கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கமலாபுரம் புனவாசல் கீழத்தெருவைச் சோ்ந்த சசிக்குமாா் மகன் பிரகாஷ் (19). கட்டடத் தொழிலாளியான இவரும், அதே தெருவைச் சோ்ந்த மணி என்பவரது மகன் சூா்யமூா்த்தியும் (17) கட்டட வேலைக்காக இருசக்கர வாகனத்தில் லெட்சுமாங்குடிக்கு புறப்பட்டனா். இவா்கள், வேளுக்குடி வளைவில் வந்தபோது எதிரே சிமென்ட் பாரத்துடன் வந்த லாரி மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பிரகாஷ் நிகழ்விடத்தில் உயிரிழந்தாா். சூா்யமூா்த்தி பலத்த காயமடைந்தாா். கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் நாகராஜன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, பிரகாஷ் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சூா்யமூா்த்தி சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...