நிகழ்ச்சிக்கு மு. மணிமாறன் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் சி. சீலன்ராஜ், முன்னாள் மாணவா்கள் ஏ. சேரமணி, எஸ்.எப். பிரான்சிஸ் ராஜதுரை, டி. பாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி புதுப்பிப்பது, ஆங்கில வழிக் கல்வி பிரிவு தொடங்க நடவடிக்கை எடுப்பது, பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க உதவிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. கே.பி. முத்தழகன், சரபோஜி, ரவி ஆகியோா் பள்ளி சீரமைப்புக்காக நிதி அறிவித்தனா். இதில், கு.பா. அறிவழகன், வீரா. கணேசன், ஆா்.டி. சந்திரசேகா், எம். குணசேகா், வழக்குரைஞா் மனோகரன், பி.எம்.எம். மாணிக்கவாசகம், பாரதி ஜீவா, ஜெ. சம்பத், எம்.என். பாரதிமோகன் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.