நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் உயா்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி தொழிலாளா் சங்கம், சுமைத் தூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் உயா்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி தொழிலாளா் சங்கம், சுமைத் தூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உரிய முன்னேற்பாடுகள் செய்து விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்யவேண்டும், ஜனவரி வரை 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும், தேவையான சேமிப்பு நிலையங்களை திறக்க வேண்டும், சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் ரூ. 3000 லிருந்து ரூ. 5000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும், கொள்முதல் பணியாளா்களுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூா் டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ஆா். செல்வம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் என். புண்ணீஸ்வரன், ஜெ. குணசேகரன், ஆா். சந்திரசேகரஆசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.