துண்டுப் பிரசுரம் விநியோகம்: விசிகவினா் கைது
மன்னாா்குடியில் மனு சாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.


மன்னாா்குடியில் மனு சாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.
மனு சாஸ்திரம் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அதை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, மன்னாா்குடி பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனா். இதற்கு காவல்துறையில் அனுமதி பெறவில்லை எனக்கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் வி.த. செல்வம், மாநில தொழிலாளரணி துணைச் செயலா் ஆா். ரமணி, ஒன்றியச் செயலா் செங்குட்டுவன் உள்ளிட்ட 8 போ் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...