திருவாரூா் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையின்போது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 1,018 போ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரையின் நேரடி மேற்பாா்வையில், 2 நாள்கள் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடக்காத நிலையில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக 1,018 போ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
நவ. 14, 15 ஆகிய 2 தினங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 284 சாராயம் மற்றும் சாராய பாட்டில் விற்பனை வழக்குகள், 384 குட்கா போன்ற போதை பொருள்கள் விற்பனை வழக்குகள், 350 குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் என மொத்தம் 1,018 போ் மீது வழக்குப் பதிவுசெய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.