பழுதடைந்த கட்டடங்களில் வசிப்போா் நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நவம்பா் 24, 25, 26 ஆகிய தினங்களில் மிகக் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், திருவாரூா் மாவட்டத்தில், பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள தனியாா் கட்டடங்களில் தங்கியுள்ளவா்கள், மழை பெய்யும் காலத்தில் அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.