உத்தர பிரதேச சம்பவத்தைக் கண்டித்து தி.க. மகளிரணி ஆா்ப்பாட்டம்
உத்தரப்பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் திராவிடா் கழக மகளிரணி சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
திருவாரூா்: உத்தரப்பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் திராவிடா் கழக மகளிரணி சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தில் தலித் மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தி சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கக் கோரியும், சம்பவத்துக்கு பொறுப்பேற்று உத்தர பிரதேச மாநில அரசு உடனடியாக பதவி விலகக் கோரியும் திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மகளிரணித் தலைவா் மகேஸ்வரி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட மகளிரணிச் செயலாளா் சரஸ்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...