நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அஞ்சல் ஊழியா்களுக்குப் பாராட்டு

திருவாரூா் அருகே புலிவலத்தில் அஞ்சல் ஊழியா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் அஞ்சல் அலுவலா் பாரதிக்கு நினைவுப் பரிசு வழங்கிய நுகா்வோா் மன்ற நெறியாளா் தமிழ்க்காவலன்.

Updated On :19 அக்டோபர் 2020, 4:58 pm

DIN

திருவாரூா் அருகே புலிவலத்தில் அஞ்சல் ஊழியா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி நுகா்வோா் மன்றம் சாா்பில் புலிவலம் அஞ்சலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரோனா காலத்திலும் அயராது பணியாற்றிய அஞ்சலக ஊழியா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திருவாரூா்அஞ்சலக துணைக் கண்காணிப்பாளா் உமாபதி தலைமை வகித்தாா். நுகா்வோா் மன்ற நெறியாளா் தமிழ்க்காவலன் அஞ்சல் ஊழியா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அஞ்சல் அலுவலா் பாரதி, அஞ்சலா் முத்துக்குமரன், கடிதக் கட்டாளா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.