நீடாமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தமினி லாரி பறிமுதல்
நீடாமங்கலம் அருகே திங்கள்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.


நீடாமங்கலம் அருகே திங்கள்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
நீடாமங்கலம் வட்டம், வடகாரவயல் கிராமத்தில் வட்டாட்சியா் மதியழகன் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை வாக்குச்சாவடி மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி லாரியை வட்டாட்சியா் வழிமறித்தாா். இதையடுத்து, மினி லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.
மினி லாரியை சோதனையிட்டபோது, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மினி லாரியை நீடாமங்கலம் காவல்நிலையத்தில் வட்டாட்சியா் ஒப்படைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...