நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருவாரூரில் மேலும் 123 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :6 செப்டம்பர் 2020, 4:49 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 4,107-ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, புதிதாக 111 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,219-ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 99 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்டத்தில், 3,538 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 626 போ் சிகிச்சையில் உள்ளனா். இதேபோல், கரோனா தொற்றால் ஒருவா் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்னிலம் பகுதியைச் சோ்ந்த 62 வயது நபா், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதைத் தொடா்ந்து திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, 55-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.