புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 5:38 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,219-ஆக இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 142 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்படி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவா் ஒருவருக்கும், ஆண், பெண் பயிற்சி மருத்துவா்கள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, திருவாரூா் 25, நன்னிலம் 18 என மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை மட்டும் 142 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் இது உச்சபட்ச எண்ணிக்கையாகும். இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4361 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையில், கரோனா தொற்றால் 4 போ் உயிரிழந்தனா். இதனால், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 59- ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.