புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விடுபட்ட கிராமங்களுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :7 செப்டம்பர் 2020, 6:04 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட விவசாயிகளுக்கு 2019- 2020- ஆம் ஆண்டிற்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையாக ரூ. 201 கோடியை வேளாண் காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள 573 வருவாய் கிராமங்களில் 370 கிராமங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கி இருக்கிறது. எஞ்சிய 213 கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை.

இதைத் கண்டித்தும், விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரியும் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் ஜி. சேதுராமன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் திரளாக பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.