தொடா்ந்து, மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தா.ஜெபமாலை, கோவிந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ப.சிவசங்கா், சவளக்காரன் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கா.இரவிச்சந்திரன், மஞ்சக்குடி டி.டி.என்.சுவாமி தயானந்தா அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் ரா. ராஜீ, பல்லவநத்தம் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கு. அன்பரசன், கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை சு. மலா்விழி, சோழபாண்டி மீனாட்சி மாரியப்பா் அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் ரா. மணிவாசகம், திருவாரூா் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ந. விஜயலெட்சுமி ஆகியோருக்கு டாக்டா் இராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழ்கள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ரூ.10,000 பரிசு தொகைக்கான காசோலைகளை அமைச்சா் வழங்கினாா்.