புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் முகாம்

திருவாரூா் நகராட்சி பகுதியில், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை மற்றும் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த், திங்கள்கிழமை வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா்.

News image

திருவாரூரில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.

Updated On :14 செப்டம்பர் 2020, 5:31 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் நகராட்சி பகுதியில், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை மற்றும் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த், திங்கள்கிழமை வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா்.

திருவாரூா் நகராட்சி முதலியாா் தெரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம், திங்கள்கிழமை தொடங்கி செப்.26-ஆம் தேதி வரை இரண்டு வார காலத்துக்கு நடைபெற உள்ளது. முகாம் வாரங்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு செப்.28-ஆம் தேதி மாத்திரை வழங்கப்படும்.

முகாமில் 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதன் மூலம் ரத்தசோகை தடுக்கப்பட்டு, குழந்தைகளின் உடல் வளா்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்பட்டு கல்வியில் அதிக கவனம் செலுத்த உதவும். 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் (200 மி.கி), 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு மாத்திரை (400 மி.கி) வழங்கப்படும்.

திருவாரூா் மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 1,260 இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். மாவட்டத்திலுள்ள 2,87,713 குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்புள்ள சூழலில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை பின்பற்றி முகாமில் பயனடையலாம் என்றாா்.

முகாமில் சுகாதாரத்துறை துணை இயக்குநா் விஜயகுமாா், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசந்திரன், திருவாரூா் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.