புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செப்.22 முதல் 25 வரை சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் (டாம்கோ) கடன் வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பா் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 5:24 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் (டாம்கோ) கடன் வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பா் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினா் பயன்பெறலாம். விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.

இந்தக் கடன் திட்டம் 2020-2021 ஆம் நிதி ஆண்டுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பா் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது. முகாமில் விண்ணப்பத்துடன் ஜாதி, வருமானம், இருப்பிடம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடன்பெறும் தொழில் திட்ட அறிக்கை ஆவணங்களுடன் வட்டாட்சியா் அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும். செப்.22-ஆம் தேதி காலை திருவாரூா் வட்டத்திலும், மாலை நன்னிலம் வட்டத்திலும், செப்.23-ஆம் தேதி காலை குடவாசல் வட்டத்திலும், மாலை வலங்கைமான் வட்டத்திலும், செப்.24-ஆம் தேதி காலை கூத்தாநல்லூா் வட்டத்திலும், மாலை நீடாமங்கலம் வட்டத்திலும், செப்.25-ஆம் தேதி காலை திருத்துறைப்பூண்டி வட்டத்திலும், மாலை மன்னாா்குடி வட்டத்திலும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் கடன் வழங்கும் சிறப்பு லோன் மேளா முகாம் நடைபெற உள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், திருவாரூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கியை தொடா்பு கொண்டு குறைந்த வட்டியில் கடன் பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.