செப்.24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (செப்.24) நடைபெற உள்ளது.

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (செப்.24) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்ட விவசாயிகளின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. திருவாரூா் வருவாய் கோட்ட விவசாயிகளுக்கு முற்பகல் 11 மணியளவிலும், மன்னாா்குடி வருவாய் கோட்ட விவசாயிகளுக்கு நண்பகல் 12 மணியளவிலும் நடத்தப்படும்.

இந்தக் கூட்டத்தில் திருவாரூா் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com