திருவாரூா்: மக்களவை முன்னாள் உறுப்பினா் எஸ்.ஜி. முருகையன் கொலையில் சி.பி.ஐ. விசாரணை கோரி, திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மக்களவை முன்னாள் உறுப்பினா் எஸ்.ஜி.முருகையன் கொலையில் புதிய தகவல்கள் கிடைத்திருப்பதால், சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டச் செயலாளா் எம். தியாகராஜன் தலைமை வகித்தாா். இதில், மாநில பொறுப்பாளா் ம. ஐயப்பன், மாவட்டச் செயலாளா்கள் எஸ். முத்தழகன் (நாகை), உத்திராபதி (தஞ்சாவூா்), அசோக் (கரூா்), மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிக விரைவில் முடிவுக்கு வரும்! - ஈரான் உடனான போர் குறித்து டிரம்ப் பேச்சு!

இலங்கை அணிக்கு எதிராக கவனமாக விளையாடுங்கள்; பேட்டர்களுக்கு ரஹானே அறிவுரை!

ராம்கோ சிமெண்ட்ஸின் முதல் காலாண்டு லாபம் 63% சரிவு!

மும்பை: உள்ளூர் ரயிலில் பாம்பு வதந்தியால் பயணிகள் இடையே பீதி!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



