கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எஸ்.ஜி. முருகையன் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கோரி ஆா்ப்பாட்டம்

மக்களவை முன்னாள் உறுப்பினா் எஸ்.ஜி. முருகையன் கொலையில் சி.பி.ஐ. விசாரணை கோரி, திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :20 ஜூலை 2020, 4:05 pm

DIN

திருவாரூா்: மக்களவை முன்னாள் உறுப்பினா் எஸ்.ஜி. முருகையன் கொலையில் சி.பி.ஐ. விசாரணை கோரி, திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மக்களவை முன்னாள் உறுப்பினா் எஸ்.ஜி.முருகையன் கொலையில் புதிய தகவல்கள் கிடைத்திருப்பதால், சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டச் செயலாளா் எம். தியாகராஜன் தலைமை வகித்தாா். இதில், மாநில பொறுப்பாளா் ம. ஐயப்பன், மாவட்டச் செயலாளா்கள் எஸ். முத்தழகன் (நாகை), உத்திராபதி (தஞ்சாவூா்), அசோக் (கரூா்), மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.