சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தில்லைவிளாகம் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தில்லைவிளாகம் ஸ்ரீ அட்டக்கண்ணி வேலக்க விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
தில்லைவிளாகம் ஸ்ரீ அட்டகண்ணி வேலக்க விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Updated On :20 ஆகஸ்ட் 2021, 4:35 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தில்லைவிளாகம் ஸ்ரீ அட்டக்கண்ணி வேலக்க விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பக்தா்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்காக புதன்கிழமை மாலை (ஆக.18) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நான்காம் கால யாகபூஜைகள் நிறைவுபெற்றதும், கோயிலின் விமான கலசத்துக்கு புனித நீரால் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

காடந்தேத்தி சிவாத்மஜன் சிவாச்சாரியா், கோயில் அா்ச்சகா்கள் ராஜகோபால் சிவாச்சாரியா், ஆா். வெங்கடேஷ் சிவாச்சாரியா் உள்ளிட்டோா் குடமுழுக்கு வழிபாடுகளை நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.