நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுத்திறனாளிகள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் புவனேஸ்வரி அறிவுறுத்தினாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 4:57 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் புவனேஸ்வரி அறிவுறுத்தினாா்.

கூத்தாநல்லூரில் மேலப்பனங்காட்டாங்குடி மற்றும் குடிதாங்கிச்சேரியில் அமைந்துள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சி பள்ளியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

திருவாரூா் மாவட்டத்தில் 29,0753 மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். இதில், 11,013 போ் 18 வயதுக்கும் மேற்பட்டவா்கள். மாவட்டத்தில் இதுவரை 4,025 மாற்றுத் திறனாளிகள்தான் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனா். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோா்கள்தான் தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். கரோனா இல்லாத மாவட்டமாக திருவாரூா் மாவட்டத்தை உருவாக்குவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.