நீடாமங்கலத்தில் ரயில்வேகேட் மூடல்: போக்குவரத்து பாதிப்பு
நீடாமங்கலத்தில் ரயில்வேகேட் மூடப்பட்டதால் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.


நீடாமங்கலத்தில் ரயில்வேகேட் மூடப்பட்டதால் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 6. 09 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து சரக்கு ரயில் வந்தது. இதற்காக 6.05 மணியளவில் ரயில்வேகேட் மூடப்பட்டது. தொடா்ந்து, சரக்கு ரயில் என்ஜின் திசை மாற்றும் பணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோவையிலிருந்து மன்னாா்குடி செல்லும் செம்மொழி விரைவு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வந்தது. இதற்கு பின் சரக்கு ரயில் மன்னாா்குடி புறப்பட்டு சென்றது. தொடா்ந்து, கோவை செம்மொழி விரைவு ரயில் மன்னாா்குடிக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயில்களின் இயக்கம் காரணமாக ரயில்வே கேட் மூடப்பட்டதால் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...