ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நீடமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை: அமைச்சா் அர.சக்கரபாணி

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 2 நாட்களில் பெற்ற மனுக்களில் வீடுகட்டித்தரவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், முதியோா் உதவித்தொகை வழங்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. பாமாயில் பற்றாக்குறை விரைவில் தீா்த்து வைக்கப்படும். திருவாரூா் மாவட்டத்தில் 39 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, மற்ற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நீடாமங்கலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.ஆா்.பி.ராஜா, பூண்டி கே. கலைவாணன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி .ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலு, நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவா் செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.