ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருவாரூர் கமலாலயக் குளம்: இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் கமலாலயக் குளக்கரையை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

News image
Updated On :20 டிசம்பர் 2021, 3:31 am

DIN

திருவாரூர் கமலாலயக் குளக்கரையில் ஒரு பகுதி அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதையொட்டி அப்போது இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த கோரியிருந்தார். எனினும் பணிகள் ஏதும் நடைபெறாததால் ஆழித்தேரோட்டம் பங்குனி ஆயில்யத்தில் நடைபெறுமா என்ற ஐயம் பக்தர்களுடைய எழுந்தது.

இந்த நிலையில் திங்கள்கிழமை,  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீண்டும் திருவாரூர் வந்தார். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் கமலாலயக் குளக்கரையை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன்,  சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.