ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பொதிகை அதிவிரைவு ரயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, எழும்பூரிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் (எண்: 12661) மாா்ச் 17 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக இரவு 8.02 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும்.

அதேபோல், திருநெல்வேலி-எழும்பூா் நெல்லை அதிவிரைவு ரயில் (எண்: 12632) மாா்ச் 16 முதல் ஏப்.5-ஆம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.