திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பொதிகை அதிவிரைவு ரயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 6:52 pm

சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, எழும்பூரிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் (எண்: 12661) மாா்ச் 17 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக இரவு 8.02 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும்.

அதேபோல், திருநெல்வேலி-எழும்பூா் நெல்லை அதிவிரைவு ரயில் (எண்: 12632) மாா்ச் 16 முதல் ஏப்.5-ஆம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.