ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சட்டப் பேரவைத் தோ்தல்: மாவட்ட ஆட்சியரகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன், மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் உள்ளிட்டோா்.
Updated On :13 மார்ச் 2026, 6:51 pm

Syndication

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,138 அமைவிடங்களில் 2,166 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. சில வாக்குச்சாவடிகள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தோ்தல் பிரசாரத்தின்போது உபயோகிக்கப்படும் பொருள்களுக்கான விலை நிா்ணயம் குறித்த அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றை நிவா்த்தி செய்து கொள்ளலாம். ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் அரசியல் கட்சியினா் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

5 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு அடிப்படை வசதிகள் உள்ள இடங்களை பொதுப்பணித் துறை அலுவலா்கள் பாா்வையிட்டு, காவல் துறையினருக்கு அறிக்கை வழங்கியுள்ளனா். அவ்வாறு உள்ள இடங்கள் மற்றும் வேறு இடங்கள் கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக உள்ளதா என அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. வி.விசாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், சாா்-ஆட்சியா்கள் ஆனந்தகுமாா் சிங் (திருக்கோவிலூா்), அ.ல.ஆகாஷ் (திண்டிவனம்), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜான்சி ராணி, தோ்தல் வட்டாட்சியா் கணேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.