மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கே முன்னுரிமை: விவசாயிகள் குற்றச்சாட்டு

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை விட வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக நன்னிலம் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுத் தெரிவித்து

News image
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இயக்கம் செய்யாமல் தேங்கியிருக்கும் காட்சி. 
Updated On :15 பிப்ரவரி 2021, 9:33 am

DIN

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை விட வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக நன்னிலம் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுத் தெரிவித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகளை விட வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளித்து, அவர்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து வியாபாரிகளிடமிருந்து, கொள்முதல் செய்யும் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் ரூபாய் 50க்கு மேல் லஞ்சம் பெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Story image

இதன் காரணமாக விவசாயிகள் கொண்டு வரும் நெல் முட்டைகளை விற்பனை செய்வதற்கு, வாரக் கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எவ்வித பாதுகாப்புமின்றி சாலையோரத்தில் பல நாள்கள் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதன் காரணமாக, ஆடு, மாடு, பன்றிகளால் நெல் மூட்டைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 3 மணி முதல் 9 மணி வரையும் நெல் கொள்முதல் செய்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

குறுகிய காலமே நடைபெறும் நெல் கொள்முதல் பணிக்கு, விடுமுறை விடுவதைத் தவிர்த்திட வேண்டும். விடுமுறை இன்றி தொடர்ந்து தினசரி கொள்முதலை நடத்திட வேண்டும். கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு வசதியாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் மீது தமிழக அரசும், மாவட்ட ஆட்சித் தலைவரும் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில் உடனடியாக, விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

Story image

மேலும் அதிகாரிகள் தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களை தினசரி ஆய்வுசெய்து, குறைகளைக் களைந்திட வேண்டுமென தமிழக விவசாயிகள் நலச்சங்க தலைவர் ஜி.சேதுராமன், உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.