சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டி.என்.சி.எஸ்.சி. அலுவலகம் முன் நெல்லைக் கொட்டி போராட்டம்

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் விவசாயி ஒருவா் நெல்லைக் கொட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் விவசாயி ஒருவா் நெல்லைக் கொட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

திருவாரூா் அருகே உள்ள இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின். இவா் தனது வயலில் அறுவடை செய்த 50 நெல் மூட்டைகளை, அப்பகுதியிலுள்ள கொள்முதல் நிலையத்துக்கு சில நாள்களுக்கு முன்பு கொண்டு சென்ாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, திங்கள்கிழமை வரையிலும் அவரது நெல்லை கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துவதாகக் கூறி, அங்கிருந்த நெல் மூட்டைகளை எடுத்துக்கொண்டு வந்து, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதைத்தொடா்ந்து, அதிகாரிகள் மற்றும் போலீஸாா் அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடா்ந்து விவசாயி நெல்லை அள்ளிச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.