சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கொள்முதல் நெல்லை உடனடியாக இயக்கம் செய்ய வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை 24 மணி நேரத்தில் இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை 24 மணி நேரத்தில் இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மண்டல நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களான கீழஅமராவதி, திருவோணமங்கலம், பள்ளங்கோயில், கொக்காலடி ஆகிய மையங்களை உடனடியாக திறக்க வேண்டும். கொள்முதல் செய்த நெல்லை 24 மணி நேரத்தில் இயக்கம் செய்ய வேண்டும். காலியாகவுள்ள பட்டியல் எழுத்தா், உதவுபவா், காவலா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மண்டலத் தலைவா் கே.கே. ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மண்டலச் செயலாளா் ஆா். மோகன், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட பொருளாளா் எம்.பி.கே.பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.