ஊா்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி பணியிடம்: ஜன.20-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி பணிக்கு ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி பணிக்கு ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி பணிக்கு, தன்னாா்வத்துடன் பணிபுரிய விருப்பமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், முற்றிலும் தன்னாா்வத்துடன் பணிபுரியும் இப்பணிக்கு ஊதியம் எதுவும் வழங்க இயலாது.
விண்ணப்பங்களை ஜனவரி 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...