பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திரைப்படங்கள் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட முடிவு!

திரையரங்கில் வெளியாகும் படங்களின் ஓடிடி வெளியீடு பற்றி...

News image

தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் - X

Updated On :12 மார்ச் 2026, 8:51 am

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று பெங்களூரில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான சில நாள்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியிடப்படுவது குறித்த அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக 5 மாநிலங்களைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் ஓடிடி வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் படத்தை வெளியிட முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் இதுபற்றி பேசுகையில், “ஓடிடி தளங்களில் ஒழுங்கற்ற முறையில் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாவதால் கடந்த 2021 முதல் திரையரங்குகள் பெரிய நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. எனவே திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் படங்களை வெளியிட தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம்.

ஹிந்தி சினிமாவில் இதனை கண்டிப்பான முறையில் பின்பற்றுவதால் தான் அங்கு அனைவரும் இலாபகரமாக இயங்க முடிகிறது. ஆனால், தெற்கில் நாம் அத்தகைய முடிவுகளை எடுக்காமல் விட்டதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே, வருகிற ஏப்ரல் 10 முதல் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ள இந்த முடிவை தயாரிப்பாளர்கள்  பின்பற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.

Summary

Decision to release movies on OTT 8 weeks after theatre release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.