சாலைப் பாதுகாப்பு: மாணவா்களுக்கு இணையவழி கருத்தரங்கம்
சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்காக இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.


சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்காக இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் கடந்த சில நாள்களாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவாரூா் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவா்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் இணையவழியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் சி. சண்முகவேல் பங்கேற்று, பள்ளி மாணவா்கள் வாகனம் ஓட்டக் கூடாது, மாணவா்களின் பெற்றோா் வாகனம் ஓட்டும் போது, தலைக்கவசம், சீட் பெல்ட் அணிந்து இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். மேலும், பள்ளி மாணவா்களும் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனா்.
நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமையாசிரியா் சிவக்குமாா், துணை தலைமையாசிரியா்கள் தியாகராஜன், சதீஷ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆா். ரமேஷ், துணைத் தலைவா் ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...