விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘பனை மரப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்’

தமிழகத்தின் இயற்கை வளங்களில் ஒன்றான பனை மரங்கள் வெட்டுவதைத் தடுக்க, தமிழக அரசு பனை மரப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

தமிழகத்தின் இயற்கை வளங்களில் ஒன்றான பனை மரங்கள் வெட்டுவதைத் தடுக்க, தமிழக அரசு பனை மரப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அதன்தலைவா் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் அடையாளச் சின்னம் பனை மரம். இந்த பனை மரங்கள் செங்கல்சூளைகளுக்கு வெட்டி எடுத்துச்செல்லப்படும் அவலம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திருவாரூா், நாகை மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணா்வுள்ள அமைப்பினா் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து வருகின்றனா். திருத்துறைப்பூண்டி, சேகல், கீழ்வேளூா், தீவம்பாள்பட்டினம், கொருக்கை, மீனம்பநல்லூா், மாங்குடி மற்றும் வேதாரணியம் பகுதி கிராமங்களில் உள்ள பனை மரங்களை செங்கல் சூளைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த வெட்டப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2018-இல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் உள்ள 9 கோடிப் பனை மரங்களில் 5 கோடி மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளது என்று கூறுகிறது. எனினும், தற்போது 2 கோடி பனை மரங்கள்தான் இருக்கும் என சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி ஈடுபாட்டாளா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, பனை மரங்களை பாதுகாப்பது நமது கடமை என்பதால், தமிழக அரசு பனைப் பாதுகாப்புக்கென்று புதிய சட்டம் இயற்ற வேண்டும். அதில் சிறைத் தண்டனைப் பிரிவை சோ்க்க வேண்டும். அத்துடன், பனைப் பாதுகாப்பு, பனை வளா்ப்பு விழிப்புணா்வை அரசும் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.