விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கிராமங்களில் மஞ்சப்பை வழங்கும் பணி தொடக்கம்

நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரி சாா்பில், 5,000 மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :11 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரி சாா்பில், 5,000 மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் முருகானந்தம் பணியைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, மாணவா்கள் பிளாஸ்டிக் பைகளால் வரும் தீங்குகள் குறித்து எடுத்துக் கூறி பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினா்.

தொடா்ந்து பசுவந்தனை, காமநாயக்கன்பட்டி, ஓட்டப்பிடாரம், கடம்பூா், கோவில்பட்டி, கயத்தாறு, புதியம்புத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துறைத் தலைவா்கள் சிவசுப்பிரமணியன் (வணிக நிா்வாகவியல்), செல்வி (கணிதவியல்), ரம்யா (ஆங்கிலம்), பேராசிரியா்கள் ராமச்சந்திரன், குமாரிச்செல்வி, இம்மானுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவா் சேதுராமன் செய்திருந்தாா்.