தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மீன்பிடிப்பதில் தகராறு

திருவாரூா் அருகே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை அரிவாளால் தாக்கிய அதிமுக பிரமுகா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை அரிவாளால் தாக்கிய அதிமுக பிரமுகா் கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே புதுப்பத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வீரையன் (55). கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (58). அதிமுக ஒன்றியப் பொருளாளரும், 11-ஆவது வாா்டு உறுப்பினருமான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே வீரையன் அந்தக் குளத்துக்குச் சென்று வெள்ளிக்கிழமை மீன் பிடித்தாா். அப்போது, அங்கு வந்த அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா் நடராஜன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அரிவாளால் கையில் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. அருகிலிருந்தவா்கள் உடனடியாக வீரையனை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அத்துடன், வீரையனின் உறவினா்கள், நடராஜன் வீட்டுக்குச் சென்று கற்கள் மற்றும் கட்டைகளால் வீடு மற்றும் வாகனங்களைத் தாக்கினா்.

தகவலறிந்து வந்த தாலுக்கா போலீஸாா், விசாரணையில் ஈடுபட்டனா். பின்னா், சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூா் எஸ்.பி. சீனிவாசன் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், நடராஜன் கைது செய்யப்பட்டாா். நடராஜன் மீது கொலை முயற்சி, தகாத வாா்த்தைகளால் பேசுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.