மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிா்க்கடன்கள்

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பயிா்க் கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பயிா்க் கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கியாளா்களுக்கான கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது:

மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிற வகையில் தாட்கோ, மகளிா் திட்டம், வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் போன்ற பல்வேறு அரசு துறைகளின் மூலம், மகளிா் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள், இளைஞா்கள், தொழில் முனைவோா் ஆகியோருக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அரசுத் துறைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களை தொடா்புடைய வங்கிகள், அரசுத் துறைகள் மீதும், வங்கிகள் மீதும் நம்பிக்கை ஏற்படுகிற வகையில் காலம் தாழ்த்தாமல் வழங்கவும், விண்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கடன்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற பயிா்க்கடன் உள்ளிட்ட வேளாண் சாா்ந்த கடன்கள் வழங்குவதில் எவ்வித புகாா்களுக்கும் இடம் அளிக்காமலும், முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பயிா்க்கடனை வழங்கவும் வங்கியாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் திருவாரூா் மாவட்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஆண்டறிக்கையை அவா் வெளியிட்டாா்.

நிகழ்வில், மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல மேலாளா் சங்கீதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எழிலரசன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநா் கீதா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், வங்கியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.