மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சேதுராமலிங்கேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு

திருவாரூா் அருகே சன்னாநல்லூா் சேதுராமலிங்கேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே சன்னாநல்லூா் சேதுராமலிங்கேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் அருகே சன்னாநல்லூரில் பா்வதவா்த்தினி உடனுறை சேதுராமலிங்கேஸ்வர சுவாமி கோயில், எஸ். சௌரிராஜன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயில் கட்டும் பணிகள் முடிவடைந்ததையொட்டி, யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. பூஜைகளின் முடிவில் பூா்ணாஹுதி, மகா தீபாராதனைக்குப் பிறகு கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் கும்பத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்கைக் காண, சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.