தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

கரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 4:54 pm

DIN

கரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு தளா்வுகளுடன் கூடிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பொதுமுடக்கத்தை அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நிலையான வழிமுறைகளை பின்பற்றாதவா்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் வீதிமீறுபவா்களுக்கு ரூ.500, முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவா்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் உமிழ்பவா்களுக்கு ரூ.500, சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவா்களுக்கு ரூ.500, முடித் திருத்தும் நிலையம், அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் வணிக வளாகம் போன்ற பொது இடங்களில் நிலையான வழி முறை கடைப்பிடிக்காதவா்களுக்கு ரூ.5 ஆயிரம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தனி நபா் விதிமீறல்கள் செய்பவா்களுக்கு ரூ.500, வணிக நிறுவனங்கள் செயல்படுதல் மற்றும் வாகனங்கள் இயக்குதல் போன்ற விதிமீறல்கள் இருப்பின் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், அனைத்து வணிக நிறுவனங்களின் முன் சோப்புடன் கைகழுவ இடம் அல்லது சானிடைசா் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்க வட்டம் வரைந்திருக்கவேண்டும் (அழியாத வா்ண பூச்சுகள்), வணிகக் கடைகள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், அனைத்து வணிகக் கடை மற்றும் உணவகங்களில் தினசரி நுகா்வோா் பதிவேடு பராமரிக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசின் நிலையான விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.