நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூத்தாநல்லூா்: எஸ்.டி.பி.ஐ.கட்சி புதிய நிா்வாகிகள் தோ்வு

கூத்தாநல்லூா் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:04 pm

DIN

கூத்தாநல்லூா் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

கூத்தாநல்லூா் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு புதிய நிா்வாகிகள் தோ்வுக்கான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா் உமா் பாரூக் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில், கட்சியின் கூத்தாநல்லூா் நகரத் தலைவராக ஜெ. முஹம்மது ஜாஸ்மின், துணைத் தலைவராக கே.ஏ.அப்துல் கபூா், செயலாளராக ஹெச்.அபுதாஹிா், துணைச் செயலாளா்களாக ஏ. செய்யது தமீம், ஏ. முஹம்மது இபுராஹிம், பொருளாளராக பி.எம். உமா் ஜெஹபா் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதேபோல, கூத்தாநல்லூா் கிளைச் செயலாளராக கே.ஏ. அஹ்மத்துல்லாஹ், லெட்சுமாங்குடி கிளைத் தலைவராக எஸ். அஜ்மல்கான், செயலாளராக ஏ.ஹெச். பைசல் கான், மரக்கடை கிளைச் செயலாளராக ஏ.யாசின் முஹம்மது உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். அத்துடன், நகர செயற்குழு உறுப்பினா்கள், நகர பொதுக்குழு உறுப்பினா்கள், தொகுதி பொதுக்குழு உறுப்பினா்கள் என தலா 3 போ் தோ்வு செய்யப்பட்டனா். அனைவரும் மூன்றாண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பாா்கள் என கட்சியின் மூத்த நிா்வாகி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.